
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* அதிகாலையில் எழுவது நல்லது. எழுந்ததும் முதல் கடமையாக தியானத்தில் ஈடுபடுங்கள்.
* நல்லது செய் நல்லதே நடக்கும் என்பர். சொல்லாலும் செயலாலும் பிறருக்கு நன்மை மட்டுமே செய்யுங்கள்.
* வாரம் ஒருமுறையாவது விரதமிருங்கள். இதனால் உடலும் மனமும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
* பலனை எதிர்பார்க்காமல் வழிபாட்டில் ஈடுபடுங்கள். உங்களின் தேவைகளை கடவுள் நன்கு அறிவார்.
* பெற்றோர் பிள்ளைகளுக்காக சொத்து சேர்க்க வேண்டாம். ஆனால், தவறியும் பாவச்சுமையைச் சேர்ப்பது கூடாது.
* தினமும் வீட்டில் வழிபாடு செய்வது அவசியம்.
- ஜெயேந்திரர்